×

சபரிமலையில் நாளை விஷூ கணி தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நாளை விஷூ கணி தரிசனம் நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை விஷூ கணி தரிசனம் காலை 5 முதல் 7 மணி வரை சன்னிதானத்தில் நடைபெறும். இதில் ஐயப்ப சுவாமியை விஷூ கணியுடன் கண்டு தரிசனம் செய்யலாம். இன்று இரவு அத்தாழப்பூஜைக்கு பிறகு, விஷூ கணி சன்னதியில் தயார் செய்யப்பட்டு நடை சாத்தப்படும். இதற்காக காய், கனிகள், கணிக்கொன்றை உள்ளிட்ட மலர்கள் வைக்கப்படும்.நாளை காலை நடை திறந்த பிறகு, கோயிலில் விளக்குகளை ஏற்றி ஐயப்பனுக்கு விஷூ கணி தரிசனம் காண்பிக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் கணி தரிசனம் மேற்கொள்ளலாம். கோயில் தந்திரி கண்டரர் ராஜீவரர், மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் போற்றி ஆகியோர் பக்தர்களுக்கு கை நீட்டமும் வழங்குவர். நேற்று ஐயப்ப சுவாமிக்கு களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை மற்றும் படி பூஜையும் நடந்தது….

The post சபரிமலையில் நாளை விஷூ கணி தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Vishu Gani darshan ,Sabarimala ,Thiruvananthapuram ,Vishu Gani ,Sabarimala Ayyappa Swamy Temple ,Sabarimala Vishu Kani Darshanam ,Ayyappan Temple ,
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...